sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கட்டி 10 ஆண்டாகியும் -பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட்

/

கட்டி 10 ஆண்டாகியும் -பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட்

கட்டி 10 ஆண்டாகியும் -பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட்

கட்டி 10 ஆண்டாகியும் -பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட்

1


ADDED : நவ 11, 2025 04:02 AM

Google News

ADDED : நவ 11, 2025 04:02 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செந்துறை: செந்துறையில் ரூ.1.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் 10 ஆண்டுகளாகியும் பயன் பாட்டிற்கு வராததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதுடன், கட்டடங்கள் சேதமாகி வருவதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.

செந்துறையை சுற்றி குடகிபட்டி, கோசிகுறிச்சி, பிள்ளையார்நத்தம், மணக்காட்டூர், போடிக்கம்பட்டி, பழனிபட்டி உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இக்கிராம மையப்பகுதியாக செந்துறை உள்ளது. செந்துறையில் ஊராட்சி அலுவலகம் முன் பஸ்களை நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வந்தனர். அப்பகுதியில் இட நெருக்கடி அதிகரித்ததால் 10 ஆண்டுகளுக்கு முன் செந்துறை பகுதியில் ரூ.1.50 கோடியில் 20க்கு மேற்பட்ட வணிக வளாகங்கள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு தற்போது வரை பயன்பாட்டிற்கு வராததால் இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. வணிக வளாகங்களின் ஜன்னல், கண்ணாடிகளை உடைத்தும் - மின்சாரசாதனங்களை சேதப்படுத்தியும் வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் பயன்படுத்தாமல் 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் சேதமடைந்து வருகிறது. அரசு பணம் வீணாவதை தடுக்க பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

சமூக விரோதிகள் கூடாரமாக சிவசங்கரன், சமூக ஆர்வலர், நத்தம் : மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் 20க்கு மேற்பட்ட வணிகவளாக கட்டடங்கள் மக்களுக்கு பயன்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இதில் இரவு நேரங்களில் மது அருந்துவது , சட்ட விரோத செயல்களும் அதிகளவு நடக்கிறது.புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் வணிக வளாக கட்டடங்கள் சேதமடைந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் , மாவட்ட நிர்வாகம் பஸ் ஸ்டாண்டை பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

பயணிகள் அவதி வசந்த் வெள்ளைத்துறை, இயற்கை ஆர்வலர், செந்துறை : அரசியல் உள் நோக்கத்திற்காக இன்னும் பஸ் ஸ்டாண்ட் திறக்கப் படாமல் உள்ளது. பஸ்ஸ்டாண்ட் இல்லாததால் நகரின் மையப்பகுதியில் கண்ட இடத்தில் நிறுத்துவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வாரச் சந்தையும் கூடுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து அபாயமும் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பெரும்பாலானோர் விவசாயிகளாக உள்ளனர். பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் விளைபொருட்களை சந்தைக்கு அனுப்ப போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

தீர்வு செந்துறையில பஸ் ஸ்டாண்ட் உள்ள இடத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்ததால் 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.1.5 கோடியில் வணிக வளாகங்களுடன் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பஸ்ஸ்டாண்ட் தற்போது வரை திறக்கப்படாமல் மக்கள் பயன் பாட்டிற்கு வராமல் உள்ளது. போக்குவரத்து துறை அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகத்தினர்,மாவட்ட நிர்வாகமும் புதிய பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து சேவையை தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் இதில் தலையிட்டு பஸ் ஸ்டாண்டை திறக்க முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us