/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யாபட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
அய்யாபட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 11, 2025 04:02 AM

நத்தம்: ந.அய்யாபட்டி காளியம்மன், கருப்பசுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இவ் விழாவையொட்டி நேற்று முன்தினம் முளைப்பாரி , தீர்த்த குட ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து கணபதி ஹோமம், அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, மஹா பூர்ணாகுதி பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று 2ம் கால யாகசாலை பூஜை தொடர்ந்து பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளம் முழங்க புனித நீர் கலசத்தில் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது வானத்தில் கருடன் வட்டமிட பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

