ADDED : நவ 15, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பொதுமக்களை ஆபாசமாக பேசி, கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் பொட்டா தலைமையிலான போலீசார் நேற்று வி.குமாரமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதேகிராமத்தை சேர்ந்த வைத்தியநாதன் மகன் விஜயபாரதி, 32; என்பவர் பொது இடத்தில் நின்று கொண்டு, பொதுமக்களை ஆபாசமாக பேசி, கத்தியை காட்டி மிரட்டினார்.
இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து, விஜயபாரதியை கைது செய்தனர்.

