/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் அல்லது புவனகிரியில் அமைச்சர் மகன் போட்டி?
/
சிதம்பரம் அல்லது புவனகிரியில் அமைச்சர் மகன் போட்டி?
சிதம்பரம் அல்லது புவனகிரியில் அமைச்சர் மகன் போட்டி?
சிதம்பரம் அல்லது புவனகிரியில் அமைச்சர் மகன் போட்டி?
ADDED : நவ 05, 2025 10:56 PM
- நமது நிருபர் -
நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், சிதம்பரம் அல்லது புவனகிரி தொகுதியில் களமிறங்க அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் திட்டமிட்டுள்ளார்.
கடந்த சட்டசபைதேர்தலில் புவனகிரி தொகுதியை அ.தி.மு.க., கைப்பற்றியது. அக்கட்சியை சேர்ந்த அருண்மொழித்தேவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக உள்ளார். சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன் போட்டியிட்டு வெற்றிக்கொடி நாட்டினார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் வெற்றி பெற சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் அ.தி.மு.க., நிர்வாகிகள் தீவிர களப்பணியை துவக்கி விட்டனர்.
கடந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மீண்டும் சீட் கேட்டு தி.மு.க., தலைமையை அணுகி உள்ளது. அதுபோல, புவனகிரி தொகுதியில் கடந்தமுறை தோல்வியடைந்த தி.மு.க., வேட்பாளர் சரவணன் மீண்டும் சீட் கேட்கிறார்.
இந்நிலையில், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் தேர்தலில் கால் பதிக்க விரும்புகிறார். சிதம்பரம் அல்லது புவனகிரி தொகுதிக்கு கதிரவன் குறி வைத்துள்ளார். இதனால் தி.மு.க., நிர்வாகிகளுக்கு பல்வேறு வகைகளில் 'கவனிப்பு ' நடந்து வருகிறது.
மேலும், கட்சி நிர்வாகிகளுக்கு வழங்க, துணை முதல்வர் உதயநிதி அணிந்திருக்கும் டிசைனில் ஆயிரக்கணக்கான வெள்ளைநிற பனியன்களுக்கு ஆர்டர் தரப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனால், இரு தொகுதிகளையும் இந்த முறை கைப்பற்றுவதற்கு தி.மு.க.,வினர் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர்.
இதன் காரணமாக, சிதம்பரம் மற்றும் புவனகிரி சட்டசபை தொகுதியில் இப்போதே அனல் பறக்க துவங்கி விட்டது.

