/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குட்டியாண்டவர் கோவிலில் 7ம் தேதி திருக்கல்யாணம்
/
குட்டியாண்டவர் கோவிலில் 7ம் தேதி திருக்கல்யாணம்
ADDED : ஆக 31, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், செல்லங்குப்பம் குட்டியாண்டவர் கோவிலில் வரும் 7 ம் தேதி 108 சங்காபிேஷகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
கடலுார், செல்லங்குப்பம் உப்பனாற்றங்கரையில் அமைந்துள்ள பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவில் கும்பாபிேஷக 22ம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வரும் 7ம் தேதி 108 சங்காபிேஷகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
அதனையொட்டி அன்று காலை 6:30 மணிக்க 108 சங்கு பூஜை துவங்குகிறது. காலை 8 மணிக்கு மூலவர் அபிேஷகம், 9:00 மணிக்கு 108 சங்காபிேஷகம் மற்றும் தீபாராதனை காலை 11:30 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.