sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பஸ்சை மீண்டும் இயக்க செம்பேரி மக்கள் கோரிக்கை

/

அரசு பஸ்சை மீண்டும் இயக்க செம்பேரி மக்கள் கோரிக்கை

அரசு பஸ்சை மீண்டும் இயக்க செம்பேரி மக்கள் கோரிக்கை

அரசு பஸ்சை மீண்டும் இயக்க செம்பேரி மக்கள் கோரிக்கை


ADDED : ஆக 31, 2025 06:57 AM

Google News

ADDED : ஆக 31, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் வழியா க செம்பேரி வரை அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டக்குடி பணிமனையில் இருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரி வரை தடம் எண்.7 டவுன் பஸ் இயக்கப்பட்டது.

இந்த பஸ் மூலம் பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி மற்றும் அரியலுார் மாவட்டம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், புதுப்பாளையம், தெத்தேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியூர் சென்று வந்தனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், இந்த டவுன் பஸ் எவ்வித அறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டதால் இப்பகுதி மக்கள் பைக், சைக்கிள் மூலம் 5 கிலோ மீட்டர் துாரமுள்ள பெண்ணாடம் வந்து, அங்கிருந்து திட்டக்குடி, விருத்தாசலம் உட்பட பல பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால், இரு மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.

எனவே, நிறுத்தப்பட்ட செம்பேரி அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us