ADDED : பிப் 20, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : பெண் போலீஸ்காரரின் கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தர்,32; டிரைவர். இவரது மனைவி தஞ்சாவூரில் ஆயுதப்படை போலீசாராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சுந்தர் நேற்று வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

