ADDED : செப் 07, 2025 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : குட்கா பொருட்கள் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சந்தனகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஜலகண்டேஸ்வரன் மனைவி அஞ்சம்மாள், 62; தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து அஞ்சம்மாளை கைது செய்தனர்.