ADDED : ஆக 05, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் தாய், மகனை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பெருமாள்,20; இவர் கடந்த 3ம் தேதி அதே பகுதியில் உள்ள ஓட்டலுக்கு பரோட்டா வாங்க சென்றார். அப்போது அங்கிருந்த மணிமாறன் என்பவருக்கும் பெருமாளுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, கலைந்து சென்றனர்.
பின், பெருமாளின் வீட்டிற்குச் சென்ற மணிமாறன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் மணி,28, ராம்,22, ஆகியோர் பெருமாளை திட்டி தாக்கினர். தடுக்க வந்த பெருமாளின் தாய் சித்ராவையும் தாக்கினர். இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
புகாரின் பேரில் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து மணி, ராம் ஆகியோரை கைது செய்து, மணிமாறனை தேடி வருகின்றனர்.

