/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையை சேர்ந்த இருவர் பவானி ஆற்றில் மாயம்
/
கோவையை சேர்ந்த இருவர் பவானி ஆற்றில் மாயம்
ADDED : ஆக 15, 2025 09:25 PM
பாலக்காடு: பாலக்காடு அருகே, ஆற்று நீரில் அடுத்து செல்லப்பட்ட கோவையை சேர்ந்த இருவரின் உடலை தீயணைப்பு படையினரும், போலீசாரும் தேடி வருகின்றனர்.
கோவை, அன்னூர் கணேசபுரத்தில் உள்ள, சோலார் நிறுவனத்தில், அதே பகுதியை சேர்ந்த பிரதீப்ராஜ், 23, தூத்துக்குடி காயல்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த பூபதிராஜ், 26, ஆகியோர் பணியாற்றினர்.
இந்நிலையில், நிறுவனத்தில் பணிபுரியும் 19 பேர் நேற்று, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது, மாலை நேரத்தில், நரசிமொக்கு என்ற இடத்தில் உள்ள பவானி ஆற்றில், குளிக்க இறங்கி உள்ளனர்.
தாழ்வான பகுதியில் சிக்கிய, பூபதிராஜ் மற்றும் பிரதீப்ராஜ் நீரில் அடித்து செல்லபட்டனர். உடனிருந்தவர்கள் சப்தம் போட்டதும், மக்கள் ஓடி வந்து ஆற்றில் அவர்களை தேடினர்.
தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்பு படையினரும் சேர்ந்து நீண்ட நேரம் தேடியும் இருவர் உடலையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமாகி விட்டதால், நாளை (இன்று) மீண்டும் தேடுதல் பணி நடக்கும் என, தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.