/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அலட்சிய இன்ஸ்பெக்டர் அதிரடி 'சஸ்பெண்ட்'
/
அலட்சிய இன்ஸ்பெக்டர் அதிரடி 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 12, 2025 01:49 PM

கோவை: கொலை வழக்கை சரியாக விசாரணை நடத்தாமல், அலட்சியமாக இருந்த இன்ஸ்பெக்டரை, டி.ஐ.ஜி., 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த ஜெயராம், 24, என்பவரை கொலை செய்து, மலுமிச்சம்பட்டியில் உள்ள கிணற்றில் உடலை வீசினர். விசாரணையில், இரு மாதங்களுக்கு முன் கொலை நடந்தது தெரிந்தது.
இவ்வழக்கில், பாளையங்கோட்டையை சேர்ந்த முருகபெருமாள், பாலமுருகன் ஆகியோர் செட்டிபாளையம் போலீசாரிடம் சரணடைந்தனர். செட்டிபாளையம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளதால், அப்பொறுப்பை கவனித்து வரும் சூலுார் இன்ஸ்பெக்டர் லெனின், இவ்வழக்கை விசாரித்தார்.
விசாரணையில், நியூட்டன், 28, பெனிட்டோ, 29 ஆகியோர் கொலை செய்ததும், கொலையில் தொடர்பில்லாத ஒருவரை, இவ்வழக்கில் சேர்த்து கைது செய்ததும் தெரிந்தது. சரியாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர் லெனினை, கோவை டி.ஐ.ஜி., சசிமோகன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.