sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 காந்திமாநகர் அரசுப் பள்ளியில் சுவையான அறுசுவை நல்விருந்து

/

 காந்திமாநகர் அரசுப் பள்ளியில் சுவையான அறுசுவை நல்விருந்து

 காந்திமாநகர் அரசுப் பள்ளியில் சுவையான அறுசுவை நல்விருந்து

 காந்திமாநகர் அரசுப் பள்ளியில் சுவையான அறுசுவை நல்விருந்து


ADDED : டிச 24, 2025 05:13 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காந்திமாநகர்: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரிடையே, 'விருந்தோம்பல்' பண்பை வளர்க்கும் விதமாக, அவர்களுக்கு 'நல்விருந்து' வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காந்திமாநகர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு, சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

பள்ளியில் பயிலும் 350க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பாரம்பரிய முறையில் வாழை இலையிட்டு உணவு பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் சாதம், வடை, பாயாசம், அப்பளம், பொரியல் மற்றும் இனிப்பு உள்ளிட்ட அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் (எஸ்.எம்.சி.,) ஒத்துழைப்புடன், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு, உணவை பரிமாறினார்கள்.

'அரசுப் பள்ளிகளில் இத்தகைய மாற்றங்கள், மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்க உதவும்' என, தலைமையாசிரியர் விஜயலட்சுமி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us