/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருங்கழிவு கையாள்வதற்கு கண்காட்சி முன்பதிவு செய்ய மாநகராட்சி அழைப்பு
/
பெருங்கழிவு கையாள்வதற்கு கண்காட்சி முன்பதிவு செய்ய மாநகராட்சி அழைப்பு
பெருங்கழிவு கையாள்வதற்கு கண்காட்சி முன்பதிவு செய்ய மாநகராட்சி அழைப்பு
பெருங்கழிவு கையாள்வதற்கு கண்காட்சி முன்பதிவு செய்ய மாநகராட்சி அழைப்பு
ADDED : செப் 07, 2025 06:51 AM
கோவை : கோவை மாநகராட்சி பகுதியில் தினமும் 100 கிலோவுக்கும் மேல் கழிவு உருவாக்குவோர் மற்றும் 5,000 சதுரடிக்கு மேல் உள்ள அனைத்து வளாகங்கள், நிறுவனங்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் துணை விதிகள்-2016ன் படி, பெருங்கழிவு உருவாக்குவோர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் உருவாக்கும் கழிவுகளை தங்கள் இடத்திலோ அல்லது மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள ஏஜன்சிகளிடமோ ஒப்பந்தம் மேற்கொண்டு அப்புறப்படுத்த வேண்டும். மக்கும் கழிவுகளாக மாற்றி உரமாக்குதல், மக்காத கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெருங்கழிவு உருவாக்குவோர் எவ்வாறு கையாள வேண்டும் என மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சி 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்தப்படுகிறது.
திடக்கழிவுகளை சரியாக கையாள்பவர்கள், பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாடு பற்றிய இயந்திர உற்பத்தியாளர்கள், தங்களது திடக்கழிவு முறையை காட்சிப்படுத்த உள்ளனர். இவ்வாறு காட்சிப்படுத்த விருப்பம் உள்ளவர்கள், 9ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்.
மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகம் - 89259 75980, மேற்கு மண்டலம் - 89259 75981, மத்திய மண்டலம் - 89259 75982, தெற்கு மண்டலம் - 90430 66114, கிழக்கு மண்டலத்தை, 89258 40945 என்ற எண்களில் அழைக்கலாம், என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.