sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஈரோட்டில் நானும் வேட்பாளர்தான்! கூட்டத்தில் உதயநிதி 'டுவிஸ்ட்'

/

ஈரோட்டில் நானும் வேட்பாளர்தான்! கூட்டத்தில் உதயநிதி 'டுவிஸ்ட்'

ஈரோட்டில் நானும் வேட்பாளர்தான்! கூட்டத்தில் உதயநிதி 'டுவிஸ்ட்'

ஈரோட்டில் நானும் வேட்பாளர்தான்! கூட்டத்தில் உதயநிதி 'டுவிஸ்ட்'


ADDED : ஏப் 17, 2024 12:45 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு தொகுதி தாராபுரத்தில் அமைச்சர் உதயநிதி, ''இங்கு வேட்பாளராக நிற்பது பிரகாஷ் கிடையாது. நான் தான் வேட்பாளராக நிற்கிறேன்,'' என, வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டார்.

ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து தாராபுரத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது:

மூன்று லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வேட்பாளர் பிரகாஷை வெற்றி பெற வைக்க வேண்டும். இங்கு வேட்பாளராக நிற்பது பிரகாஷ் கிடையாது. நான் தான் வேட்பாளராக நிற்கிறேன். என்னை ஏமாற்றிட மாட்டீங்களே.

நான் மற்ற தொகுதிகளில் எல்லாம், கருணாநிதி, ஸ்டாலின் தான் வேட்பாளர் என்று சொல்வேன். மாநில இளைஞரணி துணை செயலாளராக பிரகாஷ் உள்ளார். அந்த உரிமையில் கேட்கிறேன். பிரகாஷ் தான்வேட்பாளர்.

பிரகாஷின் மறு உருவமாக, நானும் வேட்பாளர் தான். எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுங்க. 'பேலட் மெஷினில்,' சென்று எனது பெயரை தேடிட்டு இருக்காதீங்க. அவருக்கு சார்பாக, நான் ஓட்டு கேட்கிறேன்.

இவ்வாறு, அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது, இலவச பஸ் பயணத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்னை குறித்தும், மகளிர் உரிமை தொகை, பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தொண்டர்கள் பேசினர். அவையெல்லாம் தேர்தலுக்கு பின் களையப்படும் என்று நாசூக்காக பதில் அளித்து, தொடர்ந்து பேச ஆரம்பித்து விட்டார்.

எந்த சரஸ்வதி... குழம்பிய உதயநிதி

பிரசார துவக்கத்தில் பேச ஆரம்பித்த உதயநிதி, அமைச்சர், வேட்பாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் பெயரை ஒவ்வொன்றாக வாசித்தார். அப்போது, 'அக்கா சரஸ்வதி அவர்களே' என வாசித்த வேகத்தில், 'சரஸ்வதியென்றால் யார்.. எம்.எல்.ஏ.,வா? என, குழம்பிய படி அருகே நின்றிருந்த நிர்வாகியிடம் கேட்டார்.உடனே, அந்த சரஸ்வதி இல்லீங்க (மொடக்குறிச்சி பா.ஜ., எம்.எல்.ஏ., சரஸ்வதி) இவுங்க வேற... என்று கூற, மளமளவென பெயர்களை கூறி முடித்து விட்டார்.








      Dinamalar
      Follow us