/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ள பாதிப்பு தொழிலாளர்கள் 16 பேர் மீட்பு
/
வெள்ள பாதிப்பு தொழிலாளர்கள் 16 பேர் மீட்பு
ADDED : அக் 27, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி: பூண்டி ஏரி உபரி நீர் திறப்பால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் ஆர்ப்பரிக்கிறது.
அதன்படி, கடைமடை பகுதியான, சடையங்குப்பம் பகுதியில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில், வெள்ளநீர் குடியிருப்பை சூழ துவங்கியது.
இதனால், சிலர் பிள்ளைகள் மற்றும் தங்கள் உடைமைகளுடன், உறவினர் வீடுகளுக்கு குடிபெயர்ந்தனர்.
தாழ்வான பகுதியில் தங்கியிருந்த, வடமாநில கூலி தொழிலாளிகள், 16 பேர் மீட்கப்பட்டு, சடையங்குப்பம் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

