sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 எல்லையம்மன் கோவிலை அகற்ற எடையாளம் கிராமத்தினர் எதிர்ப்பு

/

 எல்லையம்மன் கோவிலை அகற்ற எடையாளம் கிராமத்தினர் எதிர்ப்பு

 எல்லையம்மன் கோவிலை அகற்ற எடையாளம் கிராமத்தினர் எதிர்ப்பு

 எல்லையம்மன் கோவிலை அகற்ற எடையாளம் கிராமத்தினர் எதிர்ப்பு


ADDED : டிச 23, 2025 05:48 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: எடையாளம் கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலை அகற்ற, கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து, எடையாளம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் மற்றும் கிராம மக்கள், கலெக்டர் சினேகாவிடம், நேற்று அளித்த மனு:

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த எடையாளம் ஊராட்சியில், ஏரிக்கரை அருகில், நீர்நிலைக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் உள்ள எல்லையம்மன் சுவாமியை, கிராம தேவதையாக பல ஆண்டுகளாக வழிபட்டு வருகிறோம்.

'இக்கோவில் நீர் நிலையில் உள்ளதால் அகற்றப்படும்' என, அச்சிறுபாக்கம் நீர்வளத்துறை உதவி பொறியாளர், நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதில், 21 நாட்களுக்குள், பெரிய ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் அகற்றப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவில் இல் லாத ஊரில் நாங்கள் வாழ்வதற்கும், வசிப்பதற்கும் விரும்பம் இல்லை. இதனால், கிராமத்தில் உள்ள அனைவரின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை போன்ற குடியுரிமையை தங்களிடமே ஒப்படைத்து விடுகிறோம். கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சினேகா, விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us