sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி அகற்ற கிராம மக்கள் கோரிக்கை

/

 ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி அகற்ற கிராம மக்கள் கோரிக்கை

 ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி அகற்ற கிராம மக்கள் கோரிக்கை

 ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி அகற்ற கிராம மக்கள் கோரிக்கை


ADDED : டிச 24, 2025 06:06 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:தட்டாம்பட்டு ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்வாய் பாளையம் அடுத்த தட்டாம்பட்டு ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்ப்பட்டு வருகிறது.

இதில், தட்டாம்பட்டு, பெருமாள்சேரி போன்ற பகுதிகளில் உள்ள மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

பள்ளி வளாகத்தில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நீர்த்தேக்க தொட்டியின் துாண்கள், அடிப்பகுதி, சுற்றுப்புற சுவர்களில் விரிசல் விழுந்து காணப்படுகிறது. 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, குடிநீர் தொட்டி விழும் நிலையில் உள்ளது.

மேலும் பள்ளி வளா கத்தை ஒட்டி, ஊராட்சி மன்ற அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் விளையாடும் போதும், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருவோர் மீதும் அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது.

எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு, வேறு இடத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us