/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பவுத்தங்கரணையில் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
/
பவுத்தங்கரணையில் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : டிச 24, 2025 06:07 AM

செய்யூர், டிச. 24-
பவுத்தங்கரணை கிராமத்திற்கு செல்லும் தார் சாலை சேதமடைந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செய்யூர் அருகே மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பவுத்தங்கரணை கிராமத்தில் செய்யூர் - மேல்மருவத்துார் மாநில நெடுஞ்சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு செல்லும் தார் சாலை உள்ளது.
இதை நல்லுார், ஓணம்பாக்கம், பவுத்தங்கரணை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
முறையான பராமரிப்பு இன்றி சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து, பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

