sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 படாளம் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி துவக்கம்

/

 படாளம் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி துவக்கம்

 படாளம் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி துவக்கம்

 படாளம் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி துவக்கம்


ADDED : டிச 23, 2025 05:50 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை பணி, நேற்று துவங்கப்பட்டது.

மதுராந்தகம் அடுத்த படாளத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்குகிறது.

இந்த ஆலையில் ஆண்டுதோறும் ஜனவரி யில், கரும்பு அரவை பணி துவங்கி, தொடர்ந்து ஆறு மாதங்கள் இயங்கும்.

அடுத்த ஆறு மாதங்கள் கரும்பு ஆலையில், பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதன்படி, இந்தாண்டுக்கான கரும்பு அரவை, நேற்று துவங்கியது.

படாளம் சர்க்கரை ஆலை செயலாட்சியர் குமரேஸ்வரி தலைமையில், கலெக்டர் சினேகா முன்னிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, அரவையை துவக்கி வைத்தார்.

இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், ஆலை மேலாளர் மீனா சுந்தரி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து, அமைச்சர் கூறியதாவது:

கடந்த ஆண்டு, 70,000 டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. இந்த ஆண்டு, 3,200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.

இதன் மூலமாக, ஒரு லட்சம் டன் கரும்பு வரை அரைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us