/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
கோப்பை வென்றார் தான்யா * சாய்பன் பாட்மின்டனில்...
/
கோப்பை வென்றார் தான்யா * சாய்பன் பாட்மின்டனில்...
ADDED : ஆக 16, 2025 10:48 PM

சாய்பன்: வடக்கு மரியானா தீவுகளில் உளள சாய்பன் நகரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. உலக பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் சோதனை முயற்சியாக, 21க்குப் பதில், 15 புள்ளி கொண்ட செட் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் தான்யா ஹேம்நாத், அரையிறுதியில் முன்னாள் ஜூனியர் உலக சாம்பியன் (2024), ஜப்பானின் ரிரினா ஹிராமோட்டோவை வென்றார்.
பைனலில் தான்யா 21, மற்றொரு ஜப்பான் வீராங்கனை கனே சகாயை எதிர்கொண்டார். முதல் செட்டை 15-10 என கைப்பற்றினார் தான்யா. தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த செட்டையும் 15-8 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் தான்யா 15-10, 15-8 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார்.