/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
அரையிறுதியில் இந்திய ஜோடி * பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில்...
/
அரையிறுதியில் இந்திய ஜோடி * பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில்...
அரையிறுதியில் இந்திய ஜோடி * பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில்...
அரையிறுதியில் இந்திய ஜோடி * பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில்...
ADDED : டிச 19, 2025 11:20 PM

ஹாங்சு: வேர்ல்டு டூர் பாட்மின்டன் பைனல்ஸ் தொடரின் அரையிறுதிக்கு சாத்விக், சிராக் ஜோடி முன்னேறியது.
சீனாவின் ஹாங்சு நகரில், பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் உலகின் 'டாப்-8' ஜோடி, இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடந்தன.
உலகத் தரவரிசையில் 'நம்பர்-3' ஆக உள்ள இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 'பி' பிரிவில் இடம் பெற்றது. முதல் இரு போட்டியில் வெற்றி பெற்றது.
மூன்றாவது, கடைசி போட்டியில் உலகத் தரவரிசையில் 'நம்பர்-2' ஆக உள்ள மலேசியாவின் ஆரோன் சியா, சோ இக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் குறைந்தது ஒரு செட்டை வென்றால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில், இந்திய ஜோடி முதல் செட்டை (17-21) என இழந்தது.
பின் சுதாரித்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்டுகளை (21-18, 21-15) வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 17-21, 21-18, 21-15 என வெற்றி பெற்றது. பங்கேற்ற 3 போட்டியிலும் வென்று, பட்டியலில் முதலிடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

