/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் கோவிலில் உறியடி உற்சவம்
/
வில்லியனுார் கோவிலில் உறியடி உற்சவம்
ADDED : செப் 17, 2025 11:29 PM

வில்லியனுார்: வில்லியனுார் வரதராஜபெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உறியடி உற்சவம் நடந்தது.
வில்லியனுார் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா, கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை தீபாரானை நடந்து வருகிறது.
15ம் தேதி காலை 8:00 மணிக்கு கிருஷ்ணர் வீதியுலா, மாலை 6:00 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு சுவாமி உள்புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 23ம் தேதி வரை பெருமாளுக்கு காலை திருமஞ்சனம், இரவு சுவாமி உள்புறப்பாடு நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் உபயதாரர்கள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.