/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி உடனடி கடன் செயலி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
/
போலி உடனடி கடன் செயலி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
போலி உடனடி கடன் செயலி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
போலி உடனடி கடன் செயலி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
ADDED : ஆக 04, 2025 12:24 AM

புதுச்சேரி : சமூக வலைத் தளங்களில் வரும் போலியான உடனடி கடன் செயலி விளம்பரங்களை நம்பி பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறியதாவது:
சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் ஆப், ஷார்சேட் போன்றவற்றில் உடனடிக் கடன் தருவதாக பல விளம்பரங்கள் வருகின்றன. அதில், உடனடியாக கடன் பெறுவதற்கான செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து கடன் பெற்றால், சைபர் குற்றவாளிகள் பதிவிறக்கம் செய்த செயலி மூலம் உங்களுடைய புகைப்படம் மற்றும் மொபைல் எண்களை திருடி விடுகின்றனர்.
பின், தவணை தொகை கட்டும் தேதிக்கு முன்பாகவே, அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு, கடன் பெற்ற தொகையை விட அதிக தொகையை இன்றே கட்ட வேண்டும். அப்படி நீங்கள் பணத்தை அனுப்பவில்லை என்றால் உங்களுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக கூறி மிரட்டுகின்றனர்.
இதுபோன்று 100க்கும் மேற்பட்ட புகார்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளது. விசாரணையில் சைபர் குற்றவாளிகள் பாகிஸ்தான், சீனா, கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். மேலும், சமூக வலைத்தளங்களில் வரும் போலியான உடனடி கடன் செயலி விளம்பரங்களை நம்பி பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
சைபர் மோசடி சம்பந்தமான புகார் அளிக்க 1930, 0413 2276144, 9489205246 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.