ADDED : செப் 30, 2024 05:28 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: திருமணம் ஆகததால் மனவிரக்தியடைந்த கொத்தனார் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்தவர் சோலைமுத்து மகன் ஆனந்த், 37; கொத்தனார் . இவருக்கு திருமணம் ஆகாமல் இருந்ததால், மனவிரக்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் முருங்கப்பாக்கம் தனியார் ஆஸ்ரமம் வெளிப்புற கேட்டில், துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
