sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

1957ல் திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் பல்கலையில் இருப்பது கண்டுபிடிப்பு

/

1957ல் திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் பல்கலையில் இருப்பது கண்டுபிடிப்பு

1957ல் திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் பல்கலையில் இருப்பது கண்டுபிடிப்பு

1957ல் திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் பல்கலையில் இருப்பது கண்டுபிடிப்பு

6


ADDED : நவ 30, 2024 12:32 AM

Google News

ADDED : நவ 30, 2024 12:32 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து, 1957ல் திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து, 1957 முதல், 1967ம் ஆண்டுகளுக்குள், விலை மதிப்பில்லாத நான்கு சிலைகள் திருடப்பட்டன. தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசில், 2020ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில், திருமங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகள், வெளிநாட்டை சேர்ந்த கடத்தல் கும்பலால், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சிலைகள், வெளிநாட்டில் பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

குறிப்பாக, திருமங்கை ஆழ்வார் சிலை, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையின் அஸ்மோலியன் அருங்காட்சியகத்தால், 1967ல் வாங்கப்பட்டு உள்ளதும் தெரியவந்தது. மற்ற சிலைகள், அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருக்கின்றன.

இந்த சிலைகள் திருடப்பட்டதுடன், அவற்றுக்கு பதிலாக, கும்பகோணம் கோவிலில் போலி சிலைகள் வைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. வெளிநாட்டில் உள்ள உண்மையான சிலைகளை மீட்கும் முயற்சியில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, அறிவியல்பூர்வமான ஆதாரங்களை தொகுத்து, நான்கு சிலைகளும் சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமானவை என, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை பிரதிநிதி ஒருவர், தமிழகம் வந்து சிலை தொடர்பான உண்மை தன்மையை ஆராய்ந்தார்.

புலன் விசாரணை அதிகாரி டி.ஸ்.பி., சந்திரசேகரன் சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்று, அச்சிலை தமிழகத்தை சேர்ந்தது தான் என, ஆக்ஸ்போர்டு பல்கலை பிரதிநிதிகளுக்கு, அந்த பிரதிநிதி விரிவான அறிக்கை சமர்ப்பித்தார்.

மேலும், தமிழக கோவிலில் இருந்து சட்டவிரோதமாக சிலை கடத்தப்பட்டது என்பதையும் ஏற்றுக்கொண்டார். அச்சிலையை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப, அப்பல்கலை ஒப்புக்கொண்டு, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பியுள்ளது.

அதற்கான செலவையும் ஏற்பதாக தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, திருமங்கை ஆழ்வார் சிலை, ஓரிரு மாதங்களில் தமிழகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகளை, அமெரிக்காவில் இருந்து மீட்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us