sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நீட் தேர்வு பயிற்சி வகுப்பு : கலெக்டர் துவக்கி வைத்தார்

/

நீட் தேர்வு பயிற்சி வகுப்பு : கலெக்டர் துவக்கி வைத்தார்

நீட் தேர்வு பயிற்சி வகுப்பு : கலெக்டர் துவக்கி வைத்தார்

நீட் தேர்வு பயிற்சி வகுப்பு : கலெக்டர் துவக்கி வைத்தார்


UPDATED : ஏப் 09, 2025 12:00 AM

ADDED : ஏப் 09, 2025 11:41 AM

Google News

UPDATED : ஏப் 09, 2025 12:00 AM ADDED : ஏப் 09, 2025 11:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்:
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்பை கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் துவக்கி வைத்தார்.

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் புதுச்சேரி கல்வித்துறை இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கேம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் ஸ்பீக்கர்ஸ் நீட் கோச்சிங் சென்டர் மூலம் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் துவக்க விழா அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, பள்ளி துணை முதல்வர் ஞானபிரகாசி முன்னிலை வகித்தனர். கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் பேசுகையில்., அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் துரித பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இது போன்ற கல்வி சார்ந்த வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் . வரும் ஒரு மாதம் பொற்காலம் என்பதால் கடுமையாக உழைத்து நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

கணக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட கடினமான பாடங்களை மாதிரி வினாத்தாள்களை கொண்டு படித்து எழுதி தேர்வுக்கு 100 சதவீதம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் குறைந்த பட்சம் 10 பேராவது டாக்டருக்கு தேர்ச்சி பெற வேண்டும் என்றார்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us