sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உத்தரபிரதேசத்தில் சோகம்; லாரி- டிராக்டர் மோதியதில் 8 பேர் பலி; 45 பேர் காயம்

/

உத்தரபிரதேசத்தில் சோகம்; லாரி- டிராக்டர் மோதியதில் 8 பேர் பலி; 45 பேர் காயம்

உத்தரபிரதேசத்தில் சோகம்; லாரி- டிராக்டர் மோதியதில் 8 பேர் பலி; 45 பேர் காயம்

உத்தரபிரதேசத்தில் சோகம்; லாரி- டிராக்டர் மோதியதில் 8 பேர் பலி; 45 பேர் காயம்

2


ADDED : ஆக 25, 2025 07:23 AM

Google News

2

ADDED : ஆக 25, 2025 07:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உத்தரபிரதேசத்தில் லாரி- டிராக்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 45 பேர் காயம் அடைந்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷாஹரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி- டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. காஸ்கஞ்சில் இருந்து ராஜஸ்தானில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் டிராக்டரில் சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணி மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 45 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதிகவேகமாக வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதி உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்துகான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்த விபத்து இரவு 2.15 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.






      Dinamalar
      Follow us