sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இரு பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை

/

இரு பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை

இரு பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை

இரு பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை


ADDED : செப் 18, 2025 12:07 AM

Google News

ADDED : செப் 18, 2025 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்சிரோலி:மஹாராஷ்டிராவின் கட்சிரோலியில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில், இரு பெண் நக்சல்கள் கொல்லப் பட்டனர்.

மஹா.,வில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தின் எடப்பள்ளி தாலுகாவில் உள்ள மோடாஸ்கே கிராமத்தையொட்டிய வனப்பகுதியில், கட்டா எனப்படும் உள்ளூர் நக்சல் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று காலை அஹேரி பகுதிக்கு விரைந்து சென்ற கட்சிரோலியை சேர்ந்த சி - 60 எனப்படும் நக்சல் எதிர்ப்பு கமாண்டோ படையினர், மத்திய ரிசர்வ் போலீசார் ஆகியோர் இணைந்து வனப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இரு பெண் நக்சல்கள் பலியாகினர். அவர்களது உடல்களை போலீசார் மீட்டனர்.

மேலும் துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில் இருந்து நக்சல்கள் பயன்படுத்திய தானியங்கி ஏ.கே. - 47 துப்பாக்கி, அதி நவீன துப்பாக்கி, ஏராளமான வெடிமருந்துகள், நக்சல் புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நக்சல் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us