sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்றும் மழை கொட்டும் வானிலை மையம் கணிப்பு

/

இன்றும் மழை கொட்டும் வானிலை மையம் கணிப்பு

இன்றும் மழை கொட்டும் வானிலை மையம் கணிப்பு

இன்றும் மழை கொட்டும் வானிலை மையம் கணிப்பு


ADDED : ஆக 24, 2025 02:13 AM

Google News

ADDED : ஆக 24, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. இன்றும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

டில்லி மாநகரின் வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. சில சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதுகுறித்து, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டு அறைக்கு 10 புகார்கள் வந்ததாக அதிகாரிகள் கூறினர். சாலைகளில் தேங்கிய மழைநீர் ஒரு மணி நேரத்துக்குள் அப்புறப் படுத்தப்பட்டது.

சிவில் லைன்ஸ், செங்கோட்டை, லஜ்பத் நகர், நரேலா, பாவானா, அலிப்பூர் மற்றும் ஐ.டி.ஓ., உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை கொட்டித் தீர்த்தது.

டில்லி மற்றும் புறநகரில் இன்றும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வெப்பநிலை நேற்று 34.5 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட 0.3 டிகிரி செல்ஷியஸ் குறைவு என வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

காற்றில் ஈரப்பதம் நேற்று மாலை 5:30 மணிக்கு 76 சதவீதமாக பதிவாகி இருந்தது. காற்றின் தரக்குறியீடு மாலை 6:00 மணிக்கு 93ஆக இருந்தது. இது, திருப்திகரமான நிலை என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us