sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

/

கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

30


ADDED : ஆக 25, 2025 01:43 PM

Google News

30

ADDED : ஆக 25, 2025 01:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கட்சி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 25) சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொடிக்கம்பங்களை அகற்றுமாறு ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்து 4 வாரம் காலத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

4 வாரத்திற்கு பிறகு, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். அப்போது நீதிபதிகள் விரிவான விசாரணை நடத்தி, ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்துள்ள தடை குறித்து தீர்ப்பு அளிப்பர்.






      Dinamalar
      Follow us