ADDED : மார் 19, 2024 12:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை கூட பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒதுக்காததால், மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் தனது பதிவியை ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' பீஹாரில் உள்ள லோக்சபா தொகுதிக்கு 40 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.
எங்கள் கட்சிக்கு ஐந்து எம்.பி.க்கள் இருந்தனர். நான் மிகுந்த நேர்மையுடன் செயல்பட்டேன். எனக்கும் எங்கள் கட்சிக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

