ADDED : செப் 07, 2025 04:15 AM

புதுடில்லி : டில்லி செங்கோட்டை வளாகத்தில், 15வது கேட் அருகே யுள்ள பூங்காவில் சமண மத விழா கடந்த, 3ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரை நடக்கிறது.
இவ்விழா வில், சில சடங்குகள் செய்வதற்காக, தொழிலதிபர் சுதிர் ஜெயின் என் பவர், வைரம், மாணிக்கம் மற்றும் மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட 760 கிராம் எடை யுடைய தங்கக் கலசத்தை கொண்டு வந்தார். இதன் மதிப்பு, 1 கோடி ரூபாய்.
நி கழ்ச்சி முடிவில் அந்த க லசம் மாயமாகியிருந்தது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இந்த கா ட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, சமண மத துறவி வேடம் அணிந்த நபர் அந்த கலசத்தை திருடியது தெரியவந்தது. சந்தேகத்திற்குரிய அந்த நபர் விரைவில் கைது செய்யப் படுவார் என போலீசா ர் தெரிவித்தனர்.
அந்த நபர் மீது ஏற்கனவே மூன்று திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.