sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புல்டோசருடன் ராமநவமி ஊர்வலம்; போலீஸ் அனுமதி மறுப்பால் மறியல்

/

புல்டோசருடன் ராமநவமி ஊர்வலம்; போலீஸ் அனுமதி மறுப்பால் மறியல்

புல்டோசருடன் ராமநவமி ஊர்வலம்; போலீஸ் அனுமதி மறுப்பால் மறியல்

புல்டோசருடன் ராமநவமி ஊர்வலம்; போலீஸ் அனுமதி மறுப்பால் மறியல்


ADDED : ஏப் 09, 2025 05:33 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரேலி : உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்த ராமநவமி ஊர்வலத்தில், 'புல்டோசர்' கனரக இயந்திரமும் இடம்பெற்றதால், சர்ச்சை எழுந்தது.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ராமநவமியை முன்னிட்டு பரேலியில் உள்ள பரித்பூர் என்ற இடத்தில், ஆதர்ஷ் ராம்லீலா கமிட்டி என்ற பா.ஜ., ஆதரவு அமைப்பினர் சார்பில் நேற்று முன்தினம் ஊர்வலம் நடந்தது.

அதில், புல்டோசர் இயந்திரமும் இடம்பெற்றது. அதை பார்த்த போலீசார், ஊர்வலத்தில் புல்டோசர் இடம்பெறக் கூடாது என கூறினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினர் மறியல் செய்தனர். கடந்த ஐந்து ஆண்டு களுக்கும் மேலாக, ராமநவமி ஊர்வலத்தில் புல்டோசர் இயந்திரம் எடுத்துச் செல்லப்படுவதை, போட்டோ ஆதாரங்களுடன் போலீசாரிடம் விளக்கினர்.

இதையடுத்து, புல்டோசர் இயந்திரத்துடன் ஊர்வலம் செல்ல, பா.ஜ.,வினருக்கு போலீசார் அனுமதி அளித்தனர்.






      Dinamalar
      Follow us