sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு; லோக்சபாவில் 14 மசோதாக்கள் அறிமுகம்; 37 மணி நேர விவாதம்

/

பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு; லோக்சபாவில் 14 மசோதாக்கள் அறிமுகம்; 37 மணி நேர விவாதம்

பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு; லோக்சபாவில் 14 மசோதாக்கள் அறிமுகம்; 37 மணி நேர விவாதம்

பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு; லோக்சபாவில் 14 மசோதாக்கள் அறிமுகம்; 37 மணி நேர விவாதம்

7


ADDED : ஆக 21, 2025 03:51 PM

Google News

7

ADDED : ஆக 21, 2025 03:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. லோக்சபாவை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். இந்த அமர்வில் 14 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 37 மணி நேரம் விவாதம் நடந்துள்ளது.

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டு இருந்தது.

ஆனால் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே, பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால் அலுவல் நேரங்கள் செயல்படாமல் முடங்கின.

ஒத்திவைப்பு

ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான விவாதங்கள் மட்டுமே லோக்சபாவில் நடந்தன. மற்ற எந்த விவாதங்களும் நடக்க விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் முட்டுக்கட்டை போட்டனர். இந்த சூழலில் இன்று லோக்சபாவை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார்.

14 மசோதாக்கள்


இந்த அமர்வில், பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோரை 30 நாட்கள் கடுமையான குற்றச்சாட்டுகளில் கைது செய்து பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட 14 அரசு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களில் ஒன்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை மசோதா ஆகும்.

37 மணி நேரம்


இது குறித்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: இந்த அமர்வில் 120 மணி நேரம் விவாதங்களை நடத்துவோம் என்று முடிவு செய்திருந்தோம். அலுவல் ஆலோசனைக் குழுவும் இதற்கு ஒப்புக்கொண்டது.

ஆனால் தொடர்ச்சியான எதிர்க்கட்சிகள் அமளி மற்றும் திட்டமிடப்பட்ட இடையூறுகள் காரணமாக, இந்த அமர்வில் 37 மணிநேரம் கூட எங்களால் வேலை செய்ய முடியவில்லை. விவாதம் நடத்த விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையூறு செய்தனர். இவ்வாறு ஓம் பிர்லா தெரிவித்தார்.

ஒத்திவைப்பு

ராஜ்யசபா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில், உடல் நலத்தை காரணம் காட்டி முன்னாள் துணை ஜனாதிபதியும், ராஜ்யசபாவை தலைவருமான ஜக்தீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us