sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராஜாஜி நகர் முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் இன்று துவக்கம்

/

ராஜாஜி நகர் முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் இன்று துவக்கம்

ராஜாஜி நகர் முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் இன்று துவக்கம்

ராஜாஜி நகர் முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் இன்று துவக்கம்


ADDED : மார் 15, 2024 10:46 PM

Google News

ADDED : மார் 15, 2024 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜாஜிநகர்: ராஜாஜிநகர் பாலதண்டாயுதபாணி கோவிலில் 35வது ஆண்டு, பங்குனி உத்திரம் இன்று துவங்குகிறது.

பெங்களூரு, ராஜாஜிநகர் 5வது பிளாக் 65வது கிராஸ் 10வது 'ஏ' மெயின் ரோட்டில், பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 35வது ஆண்டு திருவிழா இன்று துவங்குகிறது. இன்று மாலை, பால தண்டாயுதபாணிக்கு ஸ்ரீபாலமுருகன் அலங்காரம் செய்யப்படுகிறது.

நாளை சுவாமி மலை முருகன்; 18ம் தேதி வேடன்; 19ம் தேதி விருத்தன்; 20ம் தேதி பழனி சுப்பிரமணிய சுவாமி; 21ம் தேதி சிவ பூஜை; 22ம் தேதி திருப்பரங்குன்ற முருகன்;

23ம் தேதி திருத்தணி முருகன்; 24ம் தேதி பழமுதிர்சோலை அலங்காரம் செய்யப்படுகிறது. 25ம் தேதி காலை 108 கலச பால் அபிஷேகம், ராஜ அலங்காரமும் நடக்கிறது.

மாலை சக்திவேல் புறப்பாடு, மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு மேல் அன்னதானம் வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us