2-3 வாரங்களில் பேச்சு நடத்தி வழியைக் கண்டுபிடிக்கலாம்: வரி விதிப்பு விஷயத்தில் சசி தரூர் யோசனை
2-3 வாரங்களில் பேச்சு நடத்தி வழியைக் கண்டுபிடிக்கலாம்: வரி விதிப்பு விஷயத்தில் சசி தரூர் யோசனை
ADDED : ஆக 08, 2025 02:24 PM

புதுடில்லி: ''வரும் 2-3 வாரங்களில், நாம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியைக் கண்டுபிடிக்கலாம்'' என இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவீதம் குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்து உள்ளார்.
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்தது தொடர்பாக நிருபர்களிடம் சசி தரூர் கூறியதாவது: நடப்பது கவலையளிக்கிறது. இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தது. இந்தியாவும், அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும். இந்தியா பங்காளிகளாகச் செயல்பட்டு வந்த ஒரு நாடு ஆகும்.
அந்த நாடு தனது நடத்தையை மாற்றியிருந்தால், இந்தியா பல விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும். இந்தியா உடன் டிரம்ப் எந்த வகையான ஒப்பந்தத்தை விரும்புகிறார் என்பது பற்றி நாம் அனைவரும் கேள்விப் பட்டிருக்கிறோம். அவரது பாணி வேறுபட்டது. ஒருவேளை வரும் 2-3 வாரங்களில், நாம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியைக் கண்டுபிடிக்கலாம்.
இந்தியா தனது சொந்த நலன்களையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு சசி தரூர் கூறினார். ''இந்தியாவுக்கு அதிக வரிகளை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தாலும் இந்தியாவும், அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை சசி தரூர் வெளிப்படுத்தி உள்ளார்.