sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாகனம் மோதி விபத்து; கல்லூரி ஆசிரியர் பலி

/

வாகனம் மோதி விபத்து; கல்லூரி ஆசிரியர் பலி

வாகனம் மோதி விபத்து; கல்லூரி ஆசிரியர் பலி

வாகனம் மோதி விபத்து; கல்லூரி ஆசிரியர் பலி


ADDED : செப் 01, 2025 11:50 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; பாலக்காடு அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி ஆசிரியர் உயிரிழந்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு சக்காந்தரை கைகுத்திபரம்பு பகுதியை சேர்ந்த விபின் மனைவி ஆன்சி, 35. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக, கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சென்றார்.

அப்போது, கஞ்சிக்கோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம், ஸ்கூட்டரில் மோதியது. இதில், கட்டுப்பாட்டு இழந்த ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானதில், ஆன்சியின் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

ரோட்டில் மயங்கி கிடந்த அவரை, வாளையார் போலீசார் மீட்டு கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். வாளையார் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us