sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏலத்தோட்டத்தில் தங்கும் விடுதிகளை அனுமதிக்க இயலாது கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

/

ஏலத்தோட்டத்தில் தங்கும் விடுதிகளை அனுமதிக்க இயலாது கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏலத்தோட்டத்தில் தங்கும் விடுதிகளை அனுமதிக்க இயலாது கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏலத்தோட்டத்தில் தங்கும் விடுதிகளை அனுமதிக்க இயலாது கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஜூன் 13, 2024 02:41 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:மூணாறு பகுதியில் ஏலத் தோட்டத்திற்கு என குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட இடத்தில் ரிசார்ட் உட்பட தங்கும் விடுதிகளை அனுமதிக்க இயலாது என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

மூணாறு பகுதியில் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக திருச்சூரைச் சேர்ந்த 'ஒன் எர்த் ஒன் லைப்' எனும் சமூக நல அமைப்பு கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கை நீதிபதிகள் முகம்மதுமுஸ்தாக், ஷோபாஅன்னம்மாஈப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்கின்றனர்.

அந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் ஏலத் தோட்டத்திற்கு என குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட இடத்தில் ரிசார்ட் உட்பட தங்கும் விடுதிகள் உள்ளதாக புகார் தெரிவித்தனர்.

அதனை அனுமதிக்க இயலாது என கூறிய நீதிபதிகள் அது போன்று செயல்படும் தங்கும் விடுதிகளின் எண்ணிக்கையை தாசில்தார்களின் மூலம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.

அதேபோல் ஏலத்தோட்டங்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள் தங்கும் விடுதி உள்ளிட்டவைகளுக்கு உபயோகிக்கவில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

தொழிலாளர்கள் வசிக்கும் கட்டடங்களை தங்கும் விடுதிகளாக மாற்றுவதை அனுமதிக்க இயலாது. மூணாறு பகுதியில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு நிலம் தொடர்பாக சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை நடந்துள்ளன.

தேவிகுளம் முன்னாள் துணை தாசில்தார் ரவீந்திரன் 534 போலி பட்டாக்கள் வழங்கியதாக கண்டறியப்பட்டு அவற்றை அரசு ரத்து செய்தது.

அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எதனால் எடுக்கவில்லை.

அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாரா என விசாரிக்கப்பட்டதா என நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு ரவீந்திரன் மீது விஜிலன்ஸ் விசாரணை நடந்ததாகவும், அதன் தொடர் நடவடிக்கை முடிந்து அதனை விஜிலன்ஸ் கோர்ட் அங்கீகரித்ததாகவும் அரசு தரப்பு இயக்குனர் ஜெனரல் ஷாஜி தெரிவித்தார். வழக்கு ஜூன் 19க்கு ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us