ADDED : அக் 27, 2025 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அடுத்த ஐந்து மாதங்க ளில், 3,500 வங்கி அதிகாரிகளை புதிதாக நியமிக்க, பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., மனிதவளப் பிரிவின் துணை மேலாண் இயக்குநர் கிஷோர் குமார் பொலுதாசு தெரிவித்து உள்ளதாவது:
சமீபத்தில் 541 புராபெஷனரி அதிகாரிகள் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.
மேலும், நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் 3,000 பணியிடங்கள் நிரப் பப்பட உள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக் குள் பெண் பணியாளர் கள் எண்ணிக்கையை 30 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

