/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலை ஓரத்தில் நின்றிருந்த பஸ் தீ பற்றி ஒருவர் உடல் கருகி பலி
/
சாலை ஓரத்தில் நின்றிருந்த பஸ் தீ பற்றி ஒருவர் உடல் கருகி பலி
சாலை ஓரத்தில் நின்றிருந்த பஸ் தீ பற்றி ஒருவர் உடல் கருகி பலி
சாலை ஓரத்தில் நின்றிருந்த பஸ் தீ பற்றி ஒருவர் உடல் கருகி பலி
ADDED : ஆக 13, 2025 10:58 PM

பானஸ்வாடி: பெங்களூரில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்தது. அதில் அடையாளம் தெரியாத உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு பானஸ்வாடியின் ஓம்.எம்.பி.ஆர்., லே - அவுட்டை சேர்ந்தவர் அருண். தனியார் பஸ் சர்வீஸ் நடத்தி வருகிறார்.
இவரின் பஸ்சுக்கான, 'எப்.சி., எனும் பிட்னஸ் சர்டிபிகேட்' காலம் முடிந்ததால், தனது வீட்டின் அருகில் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 10:50 மணி அளவில், இவரின் பஸ்சில் இருந்து புகை வர துவங்கியது.
அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வருவதற்குள் பஸ்சில் ஏற்பட்ட தீ, மளமளவென பரவி, கொளுந்து விட்டு எரிந்தது. அங்கு வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பஸ்சுக்குள் சென்று பார்த்த போது, உடல் கருகிய நிலையில் ஒரு சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ராமமூர்த்தி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இங்கு பஸ் நிறுத்தப்பட்டு உள்ளதால், இளைஞர்கள் சிலர் பஸ்சுக்குள் அமர்ந்து அரட்டை அடித்துள்ளனர். உரிமையாளர் அருண், பலமுறை கண்டித்தும் இளைஞர்கள் கேட்கவில்லை.
இந்நிலையில், பஸ்சில் வாலிபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால், பஸ்சில் அமர்ந்து அரட்டை அடித்த இளைஞர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கொலை செய்தார்களா அல்லது மதுபோதையில் பீடியோ, சிகரெட்டோ பிடித்தபடி உறங்கியதால் தீ விபத்து ஏற்பட்டதா என்று விசாரிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இறந்தவர் யார் என்று தெரியாததால், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.