/
புகார் பெட்டி
/
திருப்பூர்
/
பற்றிய தீ... மூண்ட புகை... தவிக்கும் மக்கள்
/
பற்றிய தீ... மூண்ட புகை... தவிக்கும் மக்கள்
ADDED : ஜூலை 27, 2025 11:41 PM

விபத்து அபாயம்
செவந்தாம்பாளையம் - சந்திராபுரம் ரோட்டில் வளைவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- நித்தின் பிரனாவ், செவந்தாம்பாளையம்.
கடும் துர்நாற்றம்
சுண்டமேடு பகுதியில் சர்ச்சுக்கு அருகே மக்கள் குப்பையை கொட்டி வருகின்றனர். அந்த இடத்தில் குப்பை கொட்டப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- ராஜா, சுண்டமேடு.
பல்லாங்குழி சாலை
முருகம்பாளையம் சுபாஷ் பள்ளி பகுதியில் இருந்து இடுவம்பாளையம் செல்லும் ரோடு நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.
- கேசவன், முருகம்பாளையம்.
தவறான பின்கோடு
திருப்பூர் ஸ்டேட் பேங்க் காலனி 1வது வீதியில் உள்ள பெயர் பலகையில் பின்கோடு தவறாக பதிவிட்டுள்ளனர். இதை சரி செய்ய வேண்டும்.
- முத்து, ராயபுரம்.
புகைமூட்டம்
திருப்பூர் மண்ணரை சுடுகாடு அருகே குப்பை மேடு, 24 மணி நேரமும் தீ பிடித்து எரிந்து, புகையால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
- சுந்தரலிங்கம், மண்ணரை
'அபாய' மரங்கள்
திருப்பூர் கஜலட்சுமி தியேட்டர் ரோடு டி.என்.எஸ்., வீதியில், இரண்டு மரங்கள் காய்ந்து, விழும் நிலையில் உள்ளது.
- சிவநாதம், திருப்பூர்.
கழிவுநீர் தேக்கம்
நல்லுார் வி.ஐ.பி., மற்றும் ஜெ.எஸ்., கார்டன் மெயின் வீதியில் கடந்த, இரு மாதமாக சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி உள்ளது.
- சின்னப்பன், நல்லுார்.
குப்பைக்கு தீ
தெக்கலுாரில் குப்பை கிடங்கில் அடிக்கடி இதுபோன்று தீ வைத்து விடுகின்றனர். இதன் காரணமாக புகை மண்டலம் ஏற்பட்டு மக்கள் சிரமப்படுகின்றனர்.
- சண்முகம், தெக்கலுார்.
ரியாக்ஷன்
சீரானது கால்வாய்
திருப்பூர் ராக்கியாபாளையம் சேரன் நகரில் ரோட்டில் வெளியேறி வந்த சாக்கடை கழிவு நீர் சரி செய்யப்பட்டது.
- ராஜேந்திரன், பத்மினி கார்டன்
கடிகாரம் பழுதுநீக்கம்
திருப்பூர் மாநகராட்சி பூங்காவில் உள்ள கடிகாரம் சரி செய்யப்பட்டது.
- வின்சென்ட் ராஜ், ராயபுரம்.