sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

இதெல்லாம் நியாயமா?

/

இதெல்லாம் நியாயமா?

இதெல்லாம் நியாயமா?

இதெல்லாம் நியாயமா?

1


PUBLISHED ON : செப் 02, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 02, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அதிகாரத்தில் இல்லாவிட்டால் யாருமே மதிக்க மாட்டார்கள் போலிருக்கிறதே... அதிலும் இந்த போலீசார் மிகவும் மோசம்...' என புலம்புகிறார், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் செயல் தலைவரும், தெலுங்கானா முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமா ராவ்.

தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமப்படுவதாக கூறி, காலி உர பைகளுடன், எதிர்க்கட்சியான பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாதில் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு ராமா ராவ் தலைமை வகித்தார். அவரை போலீசார் கைது செய்து, வாகனத்தில் ஏற்ற அழைத்துச் சென்றனர்; அப்போது ராமா ராவ் ஒத்துழைக்க மறுத்தார். அவரை, 'தரதர'வென இழுத்தும், குண்டு கட்டாக துாக்கிச் சென்றும் வாகனத்தில் ஏற்றினர்.

'ஏசி' அறைக்குள்ளேயே இருந்து பழக்கப்பட்ட ராமா ராவுக்கு, போலீசாரின் இந்த அணுகுமுறை பீதியை ஏற்படுத்தியது,

பின், இந்த அனுபவம் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய ராமா ராவ், 'என் தந்தை சந்திரசேகர ராவ், 10 ஆண்டுகள் தெலுங்கானாவின் முதல்வராக பதவி வகித்தவர்; நானும் அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது, எத்தனை போலீஸ் அதிகாரிகள் எனக்கு சலாம் போட்டிருப்பர் தெரியுமா?

'ஆனால், இப்போது கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல், தரதரவென இழுத்து சென்று கைது செய்கின்றனரே... இதெல்லாம் நியாயம் தானா...' என, கண்ணீர் வடித்துள்ளார்.






      Dinamalar
      Follow us