அஜய் தேவ்கனின் புதிய ஹாரர் திரில்லர் படம் தொடங்கியது
ADDED : 20 hours ago
அஜய் தேவ்கன் நடிக்கும் பெயரிடப்படாத புதிய ஹாரர், திரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ரோஹித் ஜுக்ராஜ் இயக்கும் இப்படத்தை, சைத்தான் மற்றும் ரெய்ட் 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஒரு விசித்திரமான சூழ்நிலை, பயமுறுத்தும் கதாபாத்திரங்கள் மற்றும் மெல்ல மெல்ல அதிகரிக்கும் மர்மம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த ஹாரர் உலகத்தை உருவாக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ரோஹித் ஜுக்ராஜ் தனது தனித்துவமான கதை சொல்லல் பாணியுடன் இந்த ஹாரர் படத்தை இயக்குகிறார். சமீபத்தில் அஜய் தேவ்கன் நடித்த தமால் 4 படம் வெளியான நிலையில், த்ரிஷ்யம் : தி கன்க்ளூஷன் படம் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.