
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்தினாலும், மறைத்து வைத்தாலும் இறைவன் அவை பற்றி கணக்குக் கேட்பான்.
* மறுமை நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விருந்தினரை உபசரிக்கட்டும்.
* ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடி ஆவார். எனவே சகோதரர் துன்பத்தில் இருந்தால் அதை நீக்குங்கள்.
* மனிதன் செய்யும் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாக்கில் இருந்தே
பிறக்கின்றன.
* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகிய மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்.
* நல்ல செயல்களைத் தவிர வேறு எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.
* நீங்கள் வைத்த மரத்தில் உள்ள பழங்களை பறவைகள் சாப்பிட்டாலும், தர்மம் செய்துவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.
* ஒரு சாண் நிலத்தை அநியாயமாக அபகரிப்பவன் மறுமை நாளில் ஏழு பூமிக்கடியில் அழுத்தப்படுவான்.