
ஜி.சாவித்ரி, ஆவடி, திருவள்ளூர்: தொடர்ந்து ஐந்து பிரதோஷ விரதம் இருந்தால்.....
நீண்ட நாள் விருப்பமும், சுபநிகழ்ச்சியும் நிறைவேறும்.
வி.சரோஜாதேவி, ராம்நகர், பெங்களூரு: ராஜாங்கம், ஆண்டிக் கோலத்தில் பழநி முருகன் ஏன் இருக்கிறார்?
மனிதன் உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக.
எல்.சச்சு, திருநாவலுார், கள்ளக்குறிச்சி: சுவாமிக்கு தேங்காய் உடைக்கும் போது, அது சிதறியது. பரிகாரம் உண்டா...
பரிகாரம் தேவையில்லை. கஷ்டம் விலகுவதாக எண்ணுங்கள்.
என்.லட்சுமி, நங்கநல்லுார், சென்னை: பெண்கள் மஞ்சள் பூசுவது ஏன்?
மஞ்சள் பூசினால் முகம் அழகு பெறும். அத்துடன் குங்குமமும் இடுங்கள்.
சி.நிர்மலா, பரமக்குடி, ராமநாதபுரம்: கர்ப்பிணிகளுக்கு ஆன்மிக ரீதியான அறிவுரை உண்டா...
தேவாரம், திருவாசகப் பாடலை கேளுங்கள். பக்தி, ஒழுக்கமுள்ள குழந்தை பிறக்கும்.
எம்.பத்மினி, குளச்சல், கன்னியாகுமரி: குழந்தை அடிக்கடி அழுகிறதே...
தன் தேவையை அழுகை மூலமாக குழந்தை சொல்கிறது. விரும்பினால் வெள்ளி அன்று அம்மன் கோயிலில் விளக்கேற்றுங்கள்.
ஆர்.விஜயலட்சுமி, கோவில்பட்டி, துாத்துக்குடி: அமாவாசை அன்று விரதம் இருக்கலாமா?
தந்தை இருப்பவர்கள் விரதம் இருக்க கூடாது.
டி.தேவிகா, சின்னமனுார், தேனி: தர்ப்பணம் செய்தால்...
முன்னோர் ஆசியால் உங்கள் சந்ததியே நலமாக வாழ்வர்.
கே.ஜெயசுதா, பல்லடம், திருப்பூர்: குருபூஜை என்றால்...
குருநாதரின் மறைவுக்கு பின், நினைவு நாளில் அவரை வழிபடுவது.