* குழந்தைகளிடம் நல்ல எண்ணங்களை விதையுங்கள்.
* பணம் தேவை என்றாலும் நேர்மை தவறக்கூடாது.
* துணிவுடனும் நம்பிக்கையுடனும் செயல்படுங்கள்.
* எந்நிலையிலும் மனநிறைவோடு வாழுங்கள்.
* வறுமையையும், வளமையையும் ஒன்றாக பாருங்கள்.
* நம்பிக்கையானவர்களுக்கு மோசம் செய்யாதே.
* நீதிமான்களே! தீர்ப்பு வழங்கும் முன் செயல்பாடுகளை உற்றுக்கேளுங்கள்.
* கண்களுக்கு தெரியாத துன்பத்தை நினைத்துக் கலங்காதீர்கள்.
* இயலாத ஒன்றிற்கு ஆசைப்படாதீர்.
* நல்லொழுக்கம் ஒன்றே கடைசி வரை பெருமைப்படுத்தும்.
* அறிவுப்பூர்வமான செயலில் ஈடுபடுங்கள். திறமை வெளிப்படும்.
* பொது இடங்களில் கண்ணியத்தை கடைப்பிடியுங்கள்
* யாராவது ஒருவருக்கு மட்டும் ஒளியாய் ஒளிருங்கள். எல்லோருக்கும் பயன்படும்.
* விளக்கில் படும் விட்டில்பூச்சியாய் இருக்காதீர்.
* தேவலோகத்தில் தீர்மானம் செய்யப்பட்டதே நடக்கிறது.
* இதயத்தை திடமாக்குங்கள்.
* உலக பற்றில் நண்பனாய் இருப்பவர்கள் தேவனுக்கு பகைவராய் இருப்பர்.