/
வாராவாரம்
/
சிந்திப்போமா
/
மதுரையில் பழிக்குப்பழியாக தொடரும் கொலை; காளி தாயார் உட்பட 7 பேர் கைது
/
மதுரையில் பழிக்குப்பழியாக தொடரும் கொலை; காளி தாயார் உட்பட 7 பேர் கைது
மதுரையில் பழிக்குப்பழியாக தொடரும் கொலை; காளி தாயார் உட்பட 7 பேர் கைது
மதுரையில் பழிக்குப்பழியாக தொடரும் கொலை; காளி தாயார் உட்பட 7 பேர் கைது
ADDED : மார் 30, 2025 04:22 AM

மதுரை : மதுரையில் பழிக்குப்பழியாக தி.மு.க., பிரமுகர் வி.கே.குருசாமிக்கும், அ.தி.மு.க., பிரமுகர் ராஜபாண்டி தரப்பிற்கும் 22 ஆண்டுகளாக தொடரும் முன்பகையால் இதுவரை 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடைசியாக கொலை செய்யப்பட்ட 'கிளாமர்' காளி கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளை காளியின் தாயார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டு 'கிளாமர்' கார்த்திக் என்ற காளீஸ்வரன் 32, மார்ச் 22இரவு தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் வெள்ளை காளி கூட்டாளிகளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
'கிளாமர்' கார்த்திக் மதுரை மாநகராட்சி தி.மு.க., முன்னாள் மண்டல தலைவர் வி.கே. குருசாமியின் சகோதரி மகன். குருசாமிக்கும், அ.தி.மு.க., முன்னாள் மாநகராட்சி மண்டல தலைவர் ராஜபாண்டிக்கும் அரசியல் ரீதியான பகை 22 ஆண்டுகளாக குடும்ப பகையாக மாறி இருதரப்பிலும் மாறி மாறி 22 கொலைகள் நடந்தன.
இருநாட்களுக்கு முன் 'கிளாமர்' காளி கொலை வழக்கில் தொடர்புடைய சுள்ளான் பாண்டி, வேறு ஒரு வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை முன்கூட்டியே கைது செய்ய தவறிய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இந்நிலையில் காளி கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியதாக வெள்ளை காளியின் தாயார் மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி 65, கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே இரு வழக்குகள் உள்ளன.
மேலும் கொலை வழக்கில் வெள்ளை காளியின் கூட்டாளிகள் சக்கிமங்கலம் நந்தகுமார் 20, ஸ்டேட் பாங்க் காலனி அசோகன் 32, காமராஜர்புரம் நவீன்குமார் 22, சிவகங்கை திருப்புவனம் மணல்மேடு முத்துகிருஷ்ணன் 18, பாலகிருஷ்ணன் 26, சென்னை கொளத்துார் கார்த்திக் 28, கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் பாலகிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

