மேற்கு வங்கத்தில் கொண்டாடப்படும் 'காஜன் திருவிழா' (மெய்வருத்தத் திருவிழா) என்பது மிகவும் பழமையான, அதே சமயம் மெய்சிலிர்க்க வைக்கும் சடங்குகளைக் கொண்ட ஒரு நாட்டுப்புறத் திருவிழாவாகும்.
இந்தத் திருவிழா முக்கியமாக சிவபெருமான், தர்ம தாகூர் மற்றும் நீல்தேவி ஆகிய தெய்வங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. வங்காள நாட்காட்டியின் கடைசி மாதமான 'சைத்ரா' மாத இறுதியில், அதாவது சித்திரை முதல் நாளுக்கு முந்தைய நாட்களில் இது நடைபெறும். நல்ல மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், நோய்கள் அண்டாமல் இருக்கவும் வேண்டி பக்தர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்கும் சாதாரண பக்தர்கள் 'சந்நியாசிகள்' அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு மாத காலம் கடும் விரதம் இருப்பார்கள். வெறும் தரையில் உறங்குவது, ஒருவேளை மட்டுமே உணவு உண்பது என மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவார்கள்.இந்த திருவிழாவினை அவர்கள் மொழியில் காஜன் திருவிழா என்கின்றனர்.இதன் சிறப்பம்சமே பக்தர்கள் தங்களை வருத்திக் கொண்டு செய்யும் சடங்குகள்தான்:
சில கிராமங்களில் பக்தர்கள் சுடுகாட்டிலிருந்து எடுக்கப்பட்ட மனித மண்டை ஓடுகளை ஏந்தி நடனமாடுவார்கள். இது வாழ்வின் நிலையாமையையும், சிவபெருமானின் சுடுகாட்டு நடனத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.உயரமான இடத்திலிருந்து கூர்மையான முட்கள் நிறைந்த படுக்கையின் மீது குதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.இரும்பு கம்பிகளால் நாக்கையும் உடலையும் துளைத்துக் கொண்டு ஊர்வலமாக வருவார்கள். எரியும் தணல் மீது வெறும் காலால் நடப்பது அல்லது நெருப்பை வாயில் கக்குவது போன்ற சடங்குகளும் நடைபெறும்.
இந்தத் திருவிழாவின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், இதில் ஜாதி, மத வேறுபாடுகள் பார்க்கப்படுவதில்லை. சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்களும் மேல் தட்டு மக்களும் ஒன்றாக இணைந்து 'சந்நியாசி' வேடம் பூண்டு சிவபெருமானை வழிபடுவார்கள்.
வங்காளப் புத்தாண்டின் முதல் நாள் அல்லது அதற்கு முந்தைய நாள் 'சரக் பூஜை' என்ற சடங்குடன் இந்தத் திருவிழா நிறைவடையும். அப்போது பக்தர்கள் ஒரு நீண்ட மரக்கம்பத்தில் கொக்கிகளால் பிணைக்கப்பட்டு, உயரத்தில் அந்தரத்தில் தொங்கியபடி சுழன்று சாகசம் செய்வார்கள்.