
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்வது எளிதுதான். முயற்சி செய்யுங்கள்.
1. மத்திய கிழக்கு ஆசிய நாடான எங்கு, அரசுமுறை பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் விதமாக, அங்குள்ள முன்னணி நாளிதழான, 'த ஜெருசலேம் போஸ்ட்' தன் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு கெளரவித்தது?
அ. ஈராக்
ஆ. ஈரான்
இ. இஸ்ரேல்
ஈ. சிரியா
2. எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களைக் கண்டறிந்து, அவற்றைத் தாக்கி அழிக்கும் திறனுடைய எந்தப் போர்க்கப்பல், இந்தியக் கடற்படையில் சமீபத்தில் இணைந்தது?
அ. ஐ.என்.எஸ். அரிஹந்த்
ஆ. ஐ.என்.எஸ். கரஞ்ச்
இ. ஐ.என்.எஸ். சக்ரா
ஈ. ஐ.என்.எஸ். அஞ்சதீப்
3. மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், எந்த மாநிலத்தின் பெயரைப் பின்வரும் வகையில் மாற்றுவதற்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது?
அ. தமிழகம்
ஆ. கேரளம்
இ. ஒடிஸா
ஈ. ஆந்திரம்
4. சமீபத்தில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
அ. 5.67 கோடி
ஆ. 6.66 கோடி
இ. 4.55 கோடி
ஈ. 8.89 கோடி
5. பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்கான நாட்டின் முதல் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் பெயர் என்ன?
அ. ஜீவன் மிஷன்
ஆ. பிரஹார்
இ. அக்னிபத்
ஈ. பி.எம்.கிசான்
6. சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர் சிலையை ராஷ்ட்ரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சமீபத்தில் திறந்து வைத்தார். அவர் யார்?
அ. ஜவாஹர்லால் நேரு
ஆ. அம்பேத்கர்
இ. ராஜாஜி
ஈ. வல்லபாய் படேல்
விடைகள்: 1. இ, 2. ஈ, 3. ஆ, 4. அ, 5. ஆ, 6. இ.

