sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/சரித்திரம் பழகு: தந்தைக்காக மகன் வெட்டிய ஏரி

சரித்திரம் பழகு: தந்தைக்காக மகன் வெட்டிய ஏரி

சரித்திரம் பழகு: தந்தைக்காக மகன் வெட்டிய ஏரி


PUBLISHED ON : நவ 25, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு சோழ மன்னரின் பெயரில் இந்த ஏரி அழைக்கப்படுகிறது. பொது யுகம் 907 முதல் 953 வரை சோழ நாட்டை அரசாண்ட மன்னர் இவர். 'மதுரையும் ஈழமும் கொண்டான்' என்ற பட்டப் பெயரும் இவருக்கு உண்டு. 'சிவனின் பாதத் தாமரையில் உறையும் வண்டு' என்று தன்னை அழைத்துக்கொண்டார் இந்த மன்னர்.

இவரின் மகன் ராசாதித்தன். தந்தையின் பெயரில் இவர்தான் இந்த ஏரியை உருவாக்கும் பணியில் இறங்கினார். இடையில் திருமுனைப்பாடி நாட்டில் இருந்த திருநாவலூருக்கு (விழுப்புரம் மாவட்டம்) எல்லையைப் பாதுகாக்க, படைகளுடன் சென்றார். அங்கே தங்கி இருந்த காலத்தில், திருநாவலூரில் ஒரு சிவன் கோயிலையும் எழுப்பினார்.

பின்னர் தக்கோலம் போரில் கலந்து கொண்டார் ராசாதித்தன். ராஷ்டிரகூடர்களுடன் ஏற்பட்ட போரில், இரண்டாம் பூதுகன் என்பவர் விட்ட அம்பினால், யானை மீது இருந்து உயிர் விட்டார் ராசாதித்தன். இதனால் 'யானை மேல் துஞ்சிய தேவர்' என்று அழைக்கப்பட்டார்.

ராசாதித்தன் உருவாக்கிய இந்த ஏரி, அவரின் மறைவுக்குப் பிறகே, முழுப் பணியும் நிறைவுற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, கடல்போல் உள்ள இந்தப் பெரிய ஏரியில் இருந்து, சென்னை மக்களின் தாகம் தீர்க்க நீர் கொண்டு வரப்படுகிறது.

வீராணம் என்று அழைக்கப்படும் இந்த வீரநாராயணன் ஏரி, எந்த மன்னரின் பெயரால் உருவாக்கப்பட்டது?

விடைகள்: முதலாம் பராந்தகச் சோழன். அவரின் இன்னொரு பெயர்தான் வீரநாராயணன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us